இந்திய இராணுவத்தினருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிரீந்த தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் சுகாஸ் உட்பட்டவர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி முன்பாக குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்