அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடமையை சுயாதீனமாகச் செய்ய முடியாததால் தான் பதவி விலகவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை நாளை மறுதினம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
தொடர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக என்னால் எனது கடமைகளை சுயாதீனமாக செய்ய இயலாத நிலை காணப்படுகிறது.
இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உட்பட பல சம்பவங்களின் பின்னணியில் எனக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.