அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பூஸ்டர் எனப்படும் 3 ஆவது கொவிட் 19 தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டார்.
அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஆபத்தான பிரிவினர் மற்றும் தீவிர நோய் நிலை உடைய நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போட அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் ஒப்புதல் வழங்கிய சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் வைத்து ஜோ பைடனுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டது.
78 வயதான ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பைஸர் தடுப்பூசியையும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது பைஸர் தடுப்பூசியையும் பெற்றறார்.
இந்நிலையில், அமெரிக்க அரச சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல் கோவையின் பிரகாரம், அவர் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
இந்த தொற்றுநோயை வெல்லவும், உயிர்களைக் காப்பாற்றவும் எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் என தடுப்பூசியைப் பெற்று்கொண்ட ஜோ பைடன் தெரிவித்தார்.
எனவே, தயவுசெய்து அனைவரும் சரியான முடிவை எடுங்கள். அனைவரும் முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் உயிரைக் காப்பாற்றும். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உயிரையும் காப்பாற்றும் எனவும் எனவும் பைடன் குறிப்பிட்டார்.