அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஆப்கானிஸ்தான் வான்வெளியில் பறக்கவிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். இல்லையேல் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தலிபான்கள் இன்று புதன்கிழமை எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் ஆளில்லா விமானங்களைப் பறக்கவிடுவதன் மூலம் சர்வதேச சட்டங்கள் மற்றும் டோஹா, கட்டார் பேச்சுக்களின்போது வழங்கிய வாக்குறுதிகளை அமெரிக்கா மீறி வருகிறது என தலிபான்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விதிகளின் கீழ் ஆப்கானிஸ்தானில் புனரமைப்புக்கு வெளிப்படையான உதவ முன்வருமாறு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தலிபான்களின் இந்த எச்சரிக்கை குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து இதுவரை எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.