ஓமான் அணிக்கு எதிரான 2வது ரீ-20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி நேற்று இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஓமான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஓமான் அணி சார்பில் இலியாஸ் அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
160 ஓட்டஙகளை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 35 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை