Thursday 25th of April 2024 10:35:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் பேருந்தில் ஏறிய நபர்கள் பயணி, நடத்துனர் மீது தாக்குதல்!

யாழில் பேருந்தில் ஏறிய நபர்கள் பயணி, நடத்துனர் மீது தாக்குதல்!


பயணிகள் பேருந்தில் ஏறி பயணி ஒருவரைத் தாக்கிய நபர்கள் அதனைத் தடுத்த நடத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று மாலை சாவகச்சேரியிலிருந்து புத்தூர் ஊடாக சுன்னாகம் நோக்கி அரச பயணிகள் பேருந்து பயணித்துள்ளது.

கெருடாவில் பகுதியில் பேருந்தை வழிமறித்த ஒருவர் ஏறியுள்ளார்.

அதிலிருந்து பேருந்து புறப்பட்டுச் சிறிது நேரத்தில் பேருந்தை வழிமறித்த மேலும் இருவர் பேருந்தில் ஏறியிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே பேருந்தில் ஏறியவர் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.

இதனை அடுத்து அவர்களை தாக்கவிடாது தடுத்து எதிர்ப்புத் தெரிவித்த நடத்துனர் மீதும் அவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி, நடத்துனர் ஆகியோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE