ரீ-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்மாக நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எதிர்த்து விளையாடும் அயர்லாந்து அணிக்கு 172 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.
குசல் பெரேரா சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து வந்த தினேஷ் சந்திமல் 6, அவிஷ்க பெர்னாண்டோ 0 ஓட்டத்துடன் அணியின் ஓட்ட எண்ணிக்கை 8 ஆக இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பதும் நிஸங்கவுடன் வனின்டு ஹசரங்க ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 131 ஆக உயர்த்திய நிலையில் வனின்டு ஹசரங்க 71 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார்.
அடுத்து வந்த பானுக ராஜபக்ஷ 1, சம்மிக்க கருணாரத்னே 2, ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
அணித் தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் ஜோஸ் லிட்டில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இதனையடுத்து 172 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அயர்லாந்து அணி சற்று முன்னர் வரை ஒரு ஓவர் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 08 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை