ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 44 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு 45 ஓட்டங்களை நெதர்லாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நெதர்லாந்து அணியின் கொலின் அக்கர்மனை தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறினர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 07 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், மகீஷ் தீக்ஷன ஒரு ஓவர் பந்து வீசி 03 ஓட்டங்களைக் கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கிடையில், மகீஷ் தீக்ஷன முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியின் இடைநடுவே மைதானத்தை விட்டு நீங்கினார்.
இதையடுத்து 45 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஷல் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை ஆதிகபட்சமாக பெற்றிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை