சீன ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் மெய்நிகர் வழியில் பேசவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு இன்று சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகள் மற்றும் பொது நலன்கள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை இடம்பெறும் என வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் தலைவர்களிடையிலான இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பைடன் சந்தித்ததில்லை. இரண்டு முறை மட்டுமே இரு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.