தாய்வான் விவகாரத்தில் சீனா மேற்கொள்ளும் "ஒருதலைப்பட்ச முயற்சிகளை" அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையே அமெரிக்க நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பின்போது பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜின்ஜியாங் மற்றும் ஹொங்கொங்கில் சீனாவின் செயற்பாடுகள் உள்ளிட்ட பிற சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்தும் இரு பெரும் வல்லரவுகளாக அமெரிக்கா மற்றும் சீனா தலைவர்கள் விவாதித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் பைடன் பதவியேற்ற பின்னர் இரு தலைவர்களும் நடத்திய மிக முக்கியமான விவாதங்களாக இவை கருதப்படுகின்றன.
இதற்கிடையில், தாய்வானின் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு "நெருப்புடன் விளையாடுவது போன்றது. நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிக்கப்படுவார்கள்" என்று பைடனுக்கு ஜி ஜின்பிங்
எச்சரிக்கை விடுத்தார் என சீன ஊடகங்களை மேற்கோள் காட்சி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, "ஒரு சீனா" கொள்கையில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்பதை ஜனாதிபதி ஜோ பை டன் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.