கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் எரிவாயு விநியோக ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..