மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
296 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட சோபர்ஸ் - திசேரா கிண்ண டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியது.
இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்த லசித் அம்புல்தெனிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதலாவது இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில், 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 345 ஓட்டகளைப் பெற்று 9 விக்கெட்டுகளை இழந்து, 296 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்து, ஆட்டத்தை இடை நிறுத்தியிருந்தது.
இந்நிலையில், தமது 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்விகண்டது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை