Friday 26th of April 2024 11:53:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரனை ஆக்கிரமிக்க முயன்றால் விளைவுகள்  மோசமாகும் - புடினை எச்சரித்த பைடன்!

உக்ரனை ஆக்கிரமிக்க முயன்றால் விளைவுகள் மோசமாகும் - புடினை எச்சரித்த பைடன்!


உக்ரைனை ஆக்கிரமித்தால் அதற்காக ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

வொஷிங்டனில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் ரஷ்யா தொடர்பான உலகின் நிலைப்பாடு மாற்றமடையும் என புடினிடம் தொலைபேசியில் பேசும்போது தெளிவுபடுத்தியதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை லிவர்பூலில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் ஜி-07 நாகளின் வெளியுறவு அமைச்சர்களும் உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் செய்தியை அனுப்பியுள்ளனர்.

ரஷ்யாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சியும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மோசமான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக G-07 நிதி அமைச்சர்கள் நாளை திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நகர்வுகள் தொடர்ந்தால் அதற்கு எதிரான ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் அவர்கள் இதன்போது ஆராய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தங்கள் நாட்டு எல்லை அருகே ரஷ்யா 94,000 படையினரை தற்போது குவித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம் அருகே ஏராளமான ரஷ்ய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நமது உளவுத் துறை தகவலின்படி, அவா்களின் எண்ணிக்கை 94,300-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யத் தரப்பிலிருந்து மோதல் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக, வரும் ஜனவரி மாத இறுதியில் இந்த மோதல் நிகழலாம். எனினும், இத்தகைய மோதலைத் தவிா்க்கவே உக்ரைன் விரும்புகிறது எனவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் ஜனாதிபதி விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷ்ய இராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்துள்ளன.

குளிர் காலத்தின் போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அச்சம் தெரிவித்துள்ளன. இது ரஷ்யா – அமெக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

எனினும் உக்ரைனை ஆக்கிரமிக்க தாங்கள் முயல்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE