Wednesday 8th of May 2024 05:52:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
நள்ளிரவில் வீடு புகுந்த ஆயுதாரிகள் துப்பாக்கி பிரயோகம்; 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுக்கொலை!

நள்ளிரவில் வீடு புகுந்த ஆயுதாரிகள் துப்பாக்கி பிரயோகம்; 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுக்கொலை!


நள்ளிரவு வேளை வீட்டினுள் புகுந்த ஆயுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் நேற்றிரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 40 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில், உந்துருயொன்றில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண்ணின் கணவர் பிள்ளைகளுடன் அறையொன்றுக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட நிலையில், வீடு புகுந்த துப்பாக்கிதாரிகள் அவ்வறையின் கதவை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த துப்பாக்கிதாரிகள் வீட்டின் பல இடங்களை நோக்கியும் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதாள குழு உறுப்பினரான மத்துகம ஷான் என்ற பாதாள உலக்குழு உறுப்பினரின் குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE