ரஷ்யாவுடன் எந்தவொரு முன்நிபந்தனைகளும் அற்ற பேச்சுக்கு தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்புடன் பேச முடியும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை இன்று சந்தித்தப் பேசிய பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உ்க்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்போது பெலாரஸ் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் என எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது என பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவோ அல்லது பெலாரசோ எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.