சிறுபோகத்திற்க்கு இரசாயன உரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும் என உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின்கீழ் விநியோகிப்பதற்காக, 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரத்தை, இரண்டு அரச உர நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்ய, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரமானது, பெலாரஸில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது உக்ரைன் போர் காரணமாக, உர இறக்குமதியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி பசாட் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வேறு நாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.