Friday 26th of April 2024 09:29:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
தொடரும் நெருக்கடி நிலை; மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு அரசு ஏற்பாடுகாளை செய்ய வேண்டும்!

தொடரும் நெருக்கடி நிலை; மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு அரசு ஏற்பாடுகாளை செய்ய வேண்டும்!


பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்க உள்ளநிலையில் தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE