இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.