Monday 6th of May 2024 08:46:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் விடுதலை!

பருத்தித்துறை மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் விடுதலை!


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் சுப்பர்மடம் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து குறித்த மீனவர்கள் நீரியல் வளத்திணைக்களத்தினால் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 மீனவர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்

இதேவேளை குறித்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE