ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் ஜோ்மனி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.
ரஷ்யாவிலிருந்து எரிவாயு கொண்டு வருவதற்காக செயல்படுத்தப்படவிருந்த நோர்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) எரிவாயு குழாய் திட்டத்தை இடைநிறுத்துவதாக ஜேர்மனி அரசு நேற்று அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கில் உள்ள மிகப்பெரிய எரிவாயு வளத்தில் 40% அளவை ஐரோப்பாவிற்கு ரஷ்யா வழங்கி வருகிறது.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் 1,225 கி.மீ .(760-மைல்) தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்க 05 வருடங்கள் எடுத்தன. இதற்கான மொத்த செலவு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.ஜேர்மனிக்கு ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் வகையில் இக்குழாய் நிறுவப்பட்டுள்ளது.
எனினும் இந்த குழாய்மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் இதுவரை செயற்படத் தொடங்கவில்லை. இந்நிலையிலேயே இத்திட்டத்தை இடைநிறுத்துவதாக ஜோ்மனி அறிவித்துள்ளது. பிரிட்டன்
பிரிட்டனில் உள்ள ஐந்து ரஷ்ய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.
அத்துடன், மூன்று ரஷ்ய பெரும் கோடீஸ்வரர்கள், பிரிட்டன் விதித்துள்ள பயணத் தடைகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவா் கூறினார். பாராளுமன்றில் அவர் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்தபோது, சில எம்.பி.க்கள் இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று வாதிட்டனர். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் விரிவடையலாம் என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவுக்கு எதிரான முதலாவது நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய நாடாளுமன்ற முடிவை அங்கீகரித்த அந்நாட்டு எம்.பிக்களை இலக்கு வைக்கும் நடவடிக்கை, ரஷ்ய வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிச் சந்தைகளுக்கான அணுகலுக்கு தடை விதிப்பது போன்றவை அடங்கும்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து, ஜெர்மனி, உலகம்