Sunday 28th of April 2024 10:48:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரேனிய இனப்படுகொலைக்கு ரஷ்யா முயற்சி - உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரேனிய இனப்படுகொலைக்கு ரஷ்யா முயற்சி - உக்ரைன் ஜனாதிபதி!


ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யாவின் வாக்குரிமையை இரத்துச் செய்யுமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்ய நடவடிக்கைகள் உக்ரேனிய இனப்படுகொலைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

இது ரஷ்ய அரச பயங்கரவாதம். அவர்கள் நமது உக்ரேனிய நகரங்களில் மேலும் உக்கிரமாக குண்டுகளை வீசப் போகிறார்கள். இன்னும் நுட்பமான முறையில் எங்கள் குழந்தைகளைக் கொல்லப் போகிறார்கள்.

இது எங்கள் நிலத்திற்கு வந்திருக்கும் தீமை. இது அழிக்கப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட குறும் வீடியோவில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE