ஜப்பான் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
கடலில் உள்ள குண்டுகளை அகற்றக் கூடிய இந்தக் கப்பல்கள் ஒன்றிணைந்த கடற்படை பயிற்சி நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் குறித்த ஜப்பான் போர்க் கப்பல் என்பவற்றில் இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் குறித்த இரண்டு ஜப்பான் கப்பல்களும் நாளை நாட்டிலிருந்து வெளியேறவுள்ளன.