Wednesday 1st of May 2024 10:45:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
மின் உற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்க நடவடிக்கை; அமைச்சர் காமினி லொக்குகே!

மின் உற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்க நடவடிக்கை; அமைச்சர் காமினி லொக்குகே!


மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.

தொடருந்துகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE