முல்லேரியாவில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சோதனையின்போது, 300 கிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி, 104 வெளிநாட்டு நாணயத்தாள்கள், உந்துருளி மற்றும் போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட 102,500 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படை கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் 25 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர் முல்லேரியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.