ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா விமான நிலையம் மீது ரஷ்ய படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் தாக்கினர். விமான நிலையத்தை முழுவதுமாக தகர்த்துவிட்டனர். நமது உள்கட்டமைப்பு, நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை, மற்றும் நமது பெற்றோர், தாத்தா பாட்டி என உக்ரேனியர்களின் பல தலைமுறைகளை அவர்கள் தொடர்ந்து அழித்து வருகின்றனர் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் 11 ஆவது நாளான நேற்று உள்ள பல நகரங்கள் மற்றும் விமானத் தளங்கள் குண்டுவீச்சு, ஷெல், பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.
எனினும் வின்னிட்சியா மத்திய உக்ரைனின் மேற்குப் பகுதியில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இங்கு சண்டைகள் குறைந்தளவே இடம்பெற்று வருகின்ற போதும் விமான நிலையம் இலக்குவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.