Friday 3rd of May 2024 01:06:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி தடை; உக்ரைனுக்கு 10 பில்லியன் டொலர் உதவி - அமெரிக்கா திட்டம்!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி தடை; உக்ரைனுக்கு 10 பில்லியன் டொலர் உதவி - அமெரிக்கா திட்டம்!


ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஆராய்ந்து வருவதாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்தை சபையில் கொண்டு நிறைவேற்ற ஆலோசித்துள்ளதாகவும் அவா் கூறினார்.

அத்துடன், ரஷ்யாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு 10 பில்லியன் டொலர் நிதி உதவிப் பொதியை அனுமதிப்பதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்ற விரும்புகிறது என்றும் நான்சி பெலோசி கூறினார்.

சா்வதேச பொருளாதாரத்திலிருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் வலுவான சட்டத்தை கொண்டுவருவது குறித்து பிரதிநிதிகள் சபை தற்போது ஆராய்ந்து வருகிறது.

இந்தச் சட்டம் அமெரிக்காவிற்குள் ரஷ்ய எரிசக்தி வளங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும். ரஷ்யா மற்றும் பெலாரஸ் உடனான வழக்கமான வர்த்தக உறவுகளை இரத்து செய்வதன் மூலம் உலக வர்த்தக அமைப்பிற்கான ரஷ்யாவின் அணுகலை முறியடிக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் நான்சி பெலோசி தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE