Monday 6th of May 2024 01:34:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரிச்சல் முனையில் இலங்கை அகதிகள்; சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட ஆறுபேர் சென்றுள்ளனர்!

அரிச்சல் முனையில் இலங்கை அகதிகள்; சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட ஆறுபேர் சென்றுள்ளனர்!


இலங்கையில் இருந்து அகதிகளால் தமிழ்நாடு சென்ற குடும்பம் ஒன்று தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகளாக மக்கள் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

ஆண் ஒருவர், 2 பெண்கள், 3 குழந்தைகள் அடங்கிய இலங்கை தமிழர்கள் 06 பேரை இறக்கி விட்டு படகு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு வரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பம் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE