இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை தென்பட்டது.
லத்தீன் அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ், சிலி நாட்டின் சான்டியாகோ நகரம் மற்றும் கராக்கஸ், வெனிசுலா நாடுகளிலும் இந்த ஆண்டின் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.
எனினும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சந்திர கிரகணம் தெரியவில்லை. ஆசிய நாடுகளில் இதனைக் காண முடியாது என விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த ஒளி காரணமாக நிலவு பழுப்பாக தோன்றியது.
அது தவிர பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிகவும் குறையும் போது நிலவு பெரிய உருவத்தில் தோன்றுகிறது. இந்தாண்டு இந்த இரண்டு அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.