தமிழ் இணையத்தளங்களில் புதிய வருகையாக கால் பதித்து தனித்துவமான பயணத்தைத் தொடரும் அருவி இணையத்தளம் இன்றுடன் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கிறது.
போர் முடிந்து பத்தாவது ஆண்டு நிறைவு நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பதிவுகளைத் தாங்கியதாக அருவி செய்தித்தளத்தின் முதல் செய்திப் பதிவேற்றம் நிகழ்ந்திருந்தது.
கொரோனா நெருக்கடி உட்பட நாட்டின் பல்வேறு சிரமமான கால கட்டங்களில் செய்தி வழங்குவதில் தனித்துவமும் துரிதமும் நம்பகமும் கொண்டதாக அருவி முடிந்தளவில் பங்காற்றியிருக்கின்றது.
தமிழில் பெருமளவு செய்தித்தளங்கள் வெளிவருகின்ற போதிலும் இலங்கையின் முக்கிய செய்திகளை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அருவி தனித்துவமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது.
அருவி செய்தித் தளத்திற்கு வாசகர்கள் வழங்குகின்ற ஆதரவு இன்னமும் அதன் வெற்றிப் பாதையை வலுவானதாக மாற்றியிருக்கின்றது.
செய்திகளை உள்ளதை உள்ளவாறே வெளியிடுவதன் ஊடாக வாசகர்கள் சரி, பிழைகளை பகுத்தாய்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அருவி இணையத்தின் பயணம் தொடரும்.
வாசகர்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புக்களும் அருவியை மேலும் மேம்படுத்தும்.
- அருவி இணையக்குழுமம் -