Saturday 4th of May 2024 10:41:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
பரீட்சை காலங்களில் மாலை 6 மணியின் பின்னர் மின்தடை இல்லை!

பரீட்சை காலங்களில் மாலை 6 மணியின் பின்னர் மின்தடை இல்லை!


சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள், பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னர் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேநேரம், எதிர்வரும், 21ஆம், 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், மாலை 6 மணியின் பின்னர், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE