அமெரிக்கா வொஷிங்டன், டி.சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
உணவகங்கள் மற்றும் பார்கள் நிறைந்த ஒரு பிரபலமான பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த 15 வயது சிறுவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வொஷிங்டன், டி.சி. பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
இலவச "மோசெல்லா" இசைக்கச்சேரி நேற்றிரவு இந்தப் பகுதியில் நடத்தப்பட்டது. கச்சேரியில் தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து இசைநிகழ்வில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். கச்சேரி உடனடியாக நிறுத்தப்பட்டது.