இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டநிறைவில் அவுஸ்திரேலிய அணி 298 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 298 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் மார்னஸ் லாபுசாக்னே 104 ஓட்டங்களுடனும், உஸ்மான் கவாஜா 37 ஓட்டங்களுடனும், டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களுடனும், கேமரூன் கிரீன் 4 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அத்துடன், களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 109 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் அறிமுக வீரரான ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித,ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை