இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, போட்டியின் முதலாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி 222 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 22ஆவது அரைச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 115 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்களாக இவ்வாறு அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.அத்துடன், ஓசத பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும்,மகீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதேபோல், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை