Friday 26th of April 2024 09:29:11 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில் கொரோனா; சுகமடைந்து வெளியேறியோர் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா; சுகமடைந்து வெளியேறியோர் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு!


உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நால்வர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஜனவரியில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற சீனப் பெண் உள்பட 7 பேர் நாட்டில் கோரோனா தொற்றுக்குள்ளாகி முழுமையாகச் சுகமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வரை 102 பேர் (சீனப் பெண் உள்பட) கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்கள் கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை உள்பட 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.

அவர்களில் 7 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE