இளைய தளபதி விஜயின் மூத்த மகன் சஞ்சய் கனடாவில் சிக்கியுள்ள நிலையில் அவரது நிலை குறித்து நடிகர் அஜித்குமார் விஜயிடம் நலம் விசாரித்துள்ளார்.
இளைய தளபதி விஜயின் மகன் படிப்பை முடித்துவிட்டு குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். திரைப்பட இயக்கம் குறித்த மேற்படிப்பு படிப்பதற்காக கனடாவுக்கு சென்றிருந்த நிலையில் கொரோனா காரணமாக பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதையடுத்து நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கியுள்ளார் சஞ்சய்.
உலகெங்கும் கொரோனா தாண்டவமாடி வரும் நிலையில் கனடாவிலும் பாதிப்பினையும் ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து மகனின் நிலை குறித்து நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளதாகவும் தினமும் மகனுடன் விஜய் தொலைபேசியில் கதைத்து கவனமாக இருக்கும்படியும் வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதையறிந்த நடிகர் அஜித்குமார் விஜய்க்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சஞ்சையின் நிலை குறித்து நலம் விசாரித்ததுடன் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சஞ்சை எப்படி இருக்கிறான், கனடா நிலைமை எப்படி இருக்கிறது என்று அஜித் கேட்டுள்ளார். பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சை பாதுகாப்பாக இருக்கிறான் என்று விஜய் பதிலளித்துள்ளார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு