யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்துவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மராட்சி மீசாலையைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான அஷோகன் சாம்பசிவம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, வட மாகாணம், யாழ்ப்பாணம்