Friday 26th of April 2024 08:59:26 AM GMT

LANGUAGE - TAMIL
சுவேதா பாசுவிற்கு
கொரோனாவால் பிரபல நடிகைக்கு மனநிலை பாதிப்பு!

கொரோனாவால் பிரபல நடிகைக்கு மனநிலை பாதிப்பு!


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் வீட்டுக்குள் தனிமையில் முடங்கியிருந்த பிரபல நடிகை சுவேதா பாசுவிற்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மனநல மருத்துவரிடம் காணொளி திரையூடாக சிகிச்சை பெற்றுள்ளார். தமிழில் உதயாவுக்கு ஜோடியாக ரா.ரா.ரா. படத்திலும் கருணாசுக்கு ஜோடியாக சந்தமாமா படத்திலும் கதாநாயகியாக நடித்த சுவேதா பாசு, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தி இயக்குநர் ரோகித் மிட்டலை காதலித்து திருமணம் முடித்திருந்த நிலையில் ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் தனிமையில் வசித்த வந்த இவர் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் 25 நாட்களுக்கு அதிகமாக வீட்டில் தனிமையில் முடங்கியுள்ளார். இதனால் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

வாழ்க்கையில் தனிமையில் நான் வசித்தது இல்லை. ஆரம்பத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடனும் பிறகு கணவருடனும் இருந்தேன். விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கும் வந்துவிட்டது.

இதனால் மனநல மருத்துவரிடம் காணொளி திரையூடாக சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் என்னைப்போல் பலர் மனநல சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவர் சொன்னார்.

மன ஆரோக்கியம் முக்கியம். கொரோனா ஊரடங்கில் அனைவரும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு அம்மா என்னை பார்க்க வந்தார். அவரை கட்டி அணைக்கக் கூட முடியவில்லை. கொரோனாவால் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசினோம். கடினமான கொரோனா பிரச்சினை விரைவில் கடந்து செல்ல பிரார்த்திக்கிறேன் என அவர் மேலும் கூறியிருந்தார்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE