பிரேசிலில் 332,000 க்கும் மேற்பட்டவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலகில் இரண்டாவது அதிக தொற்று நோயாளா்களை கொண்ட நாடாக அந்நாடு பதிவாகியுள்ளது.
நேற்றுவரை உலகில் அதிக தொற்று நோயாளா்களைக் கொண்ட நாடாக ரஷ்யா இருந்த நிலையில் பிரேசில் அதிக தொற்று நோயாளிகளுடன் ரஷ்யாவை முந்தியது.
பிரேசிலில் இதுவரை 21 ஆயிரத்து 116 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
பிரேசில் உலகின் கொரோனா வைரஸ் புதிய தொற்று மையமாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக் ரியான்நேற்று இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டில் கவலை வெளிப்படுத்தினார்.
பிரேசில் சுகாதார அமைச்சின் தரவுகளின்படி அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை வெறும் 11 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. நாட்டின் சாவ் பாலோ பகுதியில் அதிகளவு தொற்றுநோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா் எனவும் ரியான் கூறினார்.
இதேவேளை, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மலேரியா தடுப்பு மருந்துகளான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை ப் பயன்படுத்த பிரேசிலின் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்த மருந்துகளின் செயல்த்திறன் குறித்து உறுதியான சான்றுகள் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ இந்த மருந்துகளை முன்மொழிந்துள்ளாா்.
லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்றிலமலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயினை கொண்டு கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை. இதனால் நோயாளிகள் இறக்கும் அபாயமே அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது குளோரோகுயின் இரண்டுமே பயனுள்ளதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரவலாகப் பயன்படுத்துவதை ஆதரிக்கவில்லை உலக சுகாதார அமைப்பு ஆதரிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்