Wednesday 1st of May 2024 04:57:07 PM GMT

LANGUAGE - TAMIL
சீஷெல்ஸ்
சீஷெல்ஸ் பிரஜைகள் 28 போ் சிகிச்சைக்காக இன்று இலங்கை அழைத்துவரப்பட்டனா்

சீஷெல்ஸ் பிரஜைகள் 28 போ் சிகிச்சைக்காக இன்று இலங்கை அழைத்துவரப்பட்டனா்


சீஷெல்ஸில் இருந்து 28 நோயாளிகள் அடங்கிய ஒரு குழுவினா் மருத்துவ சிகிச்சைக்காக இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளா் அட்மிரல் (ஓய்வு) ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.

சீஷெல்ஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இவா்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் ஜெயநாத் கோலம்பேஜ் கூறியுள்ளாா்.

சீஷெல்ஸ் பொதுத்துறை ஊழியர்களான நோயாளிகள் இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அழைத்துவரப்பட்ட சீஷெல்ஸ் பிரஜைகள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். தொடா்ந்து அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படவுள்ளனா்.

கண்காணிப்புக் காலம் நிறைவடைந்ததும் அவா்கள் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவாா்கள் எனவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளா் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE