Friday 3rd of May 2024 06:44:41 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை
நேற்று 21 பேருக்கு தொற்று; 19 பேர் கடற்படையினர்: இருவர் துபாயிலிருந்து வந்தவர்கள்!

நேற்று 21 பேருக்கு தொற்று; 19 பேர் கடற்படையினர்: இருவர் துபாயிலிருந்து வந்தவர்கள்!


இலங்கையில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களில் 19 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 2 பேர் துபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் 19 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் துபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் றாகமை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,089ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 420 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 101 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE