பிரபல இந்தி நடிகர் கிரண்குமாரை அறிகுறியே இன்றி கொரோனா தாக்கியுள்ளதையடுத்து இந்தி திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தி திரையுலகின் மூத்த நடிகரான கிரண்குமாருக்கு (வயது 72) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கிரண்குமார் கூறும்போது, “எனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எனவே எனக்கும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் காய்ச்சல், சளி எதுவும் இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது குடும்பத்தினர் 2-வது மாடியிலும் நான் மூன்றாவது மாடியிலும் இருக்கிறோம் என்றார்.
ஏற்கனவே இந்தி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன் ஆகிய படங்களை தயாரித்த கரீம் மோரானிக்கும் அவரது மகள்கள் ஷசா, ஜோயா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது .ழைதயடுத்து இந்தி திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா