விபத்தில் படுகாயமுற்ற வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) இரவு 07:00 மணியளவில் இமையாணன் சந்திப்பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அறிவகம் இமையாணனைச் சேர்ந்த துரையன் பசுபதி என்ற 60 வயதுடையவர் படுகாயமடைந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் இன்று (27) காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் வீதியால் நடந்து சென்று இருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார் மோட்டார்சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி