Friday 26th of April 2024 10:18:46 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில்
மேலும் 13 பேர் கொரோனாவில் இருந்து தப்பினர்: மொத்த குணமடைவு 745 ஆக உயர்வு!

மேலும் 13 பேர் கொரோனாவில் இருந்து தப்பினர்: மொத்த குணமடைவு 745 ஆக உயர்வு!


கொரோனாவின் பிடிக்குள் சிக்கியிருந்த மேலும் 13 பேர் குணமடைந்துள்ளதாக இலங்கை தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களது எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று (மே-28) மு.பகல் 10.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 150 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து, இதுவரை 1,469 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், வெளிநாடுகளிலிருந்து வந்த 433 பேர் உள்ளடங்குவதோடு, அவர்களில் 430 பேர் இலங்கையர்கள் எனவும், 3 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 727 பேர் இதுவரை அடையாளம் கணப்பட்டுள்ளதோடு இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 714 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று குணமடைந்த 13 பேரில் 7 கடற்படை வீரர்களும் உள்ளடங்கும் நிலையில், அவர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE