பிரேசிலில் கொரோனாவுக்கு நேற்று 1,156 போ் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த உயிா்ப்பலி 26,754 ஆக உயா்ந்துள்ளது.
அத்துடன் பிரேசிலில் இதுவரை 4 இலட்சத்து 38 ஆயிரத்து 238 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர் என பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரேசில் உள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று நோய் ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்