யாழ்ப்பாணம் வடமராட்ச்சி பிரதேசத்தின் வல்வெட்டித்துறையின் கொம்மந்தறை கிராமம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் குறித்த கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அந்தக் கிராமத்தில் ஆயுத தளபாடங்கள் மீட்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் அண்மையிலேயே அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்பதால் இன்னமும் எங்காவது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே தேடுதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி