கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வண்டில் சின்னத்தில் சுயேட்சைக்குழு ஊடாக போட்டியிட்டு நான்கு ஆசனங்களை கைப்பற்றிய மாற்றத்துக்கான இளையோர் அமைப்பு சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் பங்குகொண்டிருந்தார்.
கலந்துரையாடலின் முடிவில் தமக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்றத்துக்கான இளையோர் அமைப்பு உடன்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இளையோர் அமைப்பின் தலைவரும் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை