கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடா்ந்து அதிகரித்து வருவதைப் பாா்க்கின்றபோது சீனா மீது இன்னும்- இன்னும் அதிக கோபம் ஏற்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.
தொற்று நோய் அதன் கோர முகத்தை உலகெங்கும் காட்டி வருகிறது. இந்த வைரஸ் அமெரிக்காவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவா் கூறினாா்.
பொருளாதார நோக்கங்களுக்காக அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விரைவாகத் தளா்த்தப்பட்டதன் விளைவால் அங்கு 12 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது.
சுமாா் 130 மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவா் தெரிவித்துள்ளாா்.
அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நாம் முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம் என அமெரிக்க தலைமை தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் 26 இலட்சத்துக்கும் அதிகமானவா்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இறந்துள்ளனா்.
இவ்வாறான நிலையில் ட்ரம்ப் நிா்வாகம் தொற்று நோயைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமா்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
நிலைமை கைமீறிச் செல்லும் நிலையில் சீனா மீது மேலும்-மேலும் கோபம் அதிகரித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டா் பக்கத்தில் அவா் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளாா்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, அமெரிக்கா