இரண்டு கோடி ரூபா பெறுமதியான, உயிர்க் கொல்லி போதைப் பொருளான ஐஸ் போதை பொருள் மற்றும் கேரள கஞ்சா கடத்தல் முயற்சி இன்று அதிகாலை பருத்தித்துறையில் வைத்து முறியடிக்ப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இருந்து வான் ஒன்றில் குறித்த போதை பொருளை கடத்திச் சென்ற போது பருத்தித்துறையில் வைத்து இன்று (ஜூலை-1) அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபரிடம் (வயது-50) இருந்து> இரண்டு கிலோ ஐஸ் போதை பொருள் மற்றும் 30 கிலோ கிராம் கேரள கஞ்சா பேதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் சிறப்பு அதிரடிப் படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை, வடமராட்சி, வல்வெட்டித்துறை