இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இதுவரை 842 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 842 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 62 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை