2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதான குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக்கு முன்னிலையாகியிருந்த இலங்கை அணியின் முன்னாள் முன்னணி வீரர் குமார் சங்கக்கார 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த விசாரணைக்கு இன்று காலை 9.00 மணிக்கு குமார் சங்கக்கார முன்னிலையாகி இருந்த நிலையில் இன்று பி.பகல் 6.30 மணிக்கு பின்னரே அங்கிருந்து வெளியேறியுள்ளார். விசாரணைக் குழுவின் முன்னிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 9 மணித்தியாலங்கள் குமார் சங்கக்கார வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டீ சில்வா ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணைக் குழுவில் முன்னிலையாகி வெளியேறியிருந்த நிலையில் இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவும் நேற்று முன்னிலையாகி 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிச் சென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று குமார் சங்கக்காரவிடம் 9 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததை அடுத்து மற்றொரு முன்னாள் முன்னணி வீரர் மகேல ஜெயவர்த்தனவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை